சென்னையில் மொத்தமுள்ள 603 வழிதடங்களிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு மழையால் மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடிந்துவிட்டதால் சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் இயக்கம் சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நாளொன்றுக்கு 2,600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகள் விறுவிறுப்புடன் நடக்கின்றன.