புயல் காரணமாக சென்னையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு முதல் பிரபலங்கள் வரை பலரும் உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திமுக அரசு மக்களுக்கு எந்த வித நிவாரண பணிகளையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று சசிகலா சாடியுள்ளார். கடந்த மூன்று நாட்களாக தண்ணீர், உணவு மற்றும் ஆவின் பால் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வரும் நிலையில் மக்கள் புயல் மழையால் ஏற்கனவே பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு இடையே ஒரு லிட்டர் ஆவின் பால் 150 ரூபாய்க்கு வாங்குகிற அவல நிலை நிலவுகிறது என வேதனை தெரிவித்துள்ளார்.