சட்டவிரோத பனிபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது, மீண்டும் வாதங்களை முன் வைக்க அனுமதி கேட்டு செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து, உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்த நிலையில், சில ஆவணங்களை வங்கி தரவில்லை என செந்தில் பாலாஜி புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். செந்தில் பாலாஜி தரப்பிற்கு வங்கியில் இருந்து பெறப்பட்ட அசல் ஆவணங்கள் (செலான்) இன்று வழங்கப்பட்டன.