அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால ஜாமீன் கோரிய வழக்குகளில் தீர்ப்பு இன்று  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. மேலும், காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதும் இன்று  உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.