தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முறை பில் போடும் முறையை ரத்து செய்ய வேண்டும்.

உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதனை நிறைவேற்ற கோரி ஜூன் 15ஆம் தேதி(இன்று ) முதல் நடைபெற இருந்த ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கைது செய்யப்பட்டதால் அசாதாரண சூழல் நிலவுவதால் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 21 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது