செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு CM பதவி தான் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் தங்கமணி கூறியதாவது, “CM ஸ்டாலின் குடும்பத்தில் செந்தில் பாலாஜியை அவ்வளவு நம்புகிறார்கள். ஆனால் அவர் இவர்கள் அனைவரையும் கீழே தள்ளிவிட்டு அடுத்த முதல்வர் ஆகிவிடுவார்.

இதை முதல்வர் ஸ்டாலினுக்கு நான் எச்சரிக்கையாக கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். ஏனென்றால்  இங்கு நடக்கின்ற எந்த நிகழ்வையும் உளவுத்துறை முதல்வரின் கண்காணிப்பிற்கு கொண்டு செல்லாது. இங்கு இருக்கின்ற உளவுத்துறை செந்தில் பாலாஜியின் உளவுத்துறை. செந்தில் பாலாஜி என்ன சொல்கிறாரோ அதைத்தான் உளவுத்துறை கேட்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.