பிரபல நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் மன்னர் வகையறா. இந்த  படத்தை தயாரிக்க நடிகர் விமல் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடன் வாங்கியுள்ளார். பின்னர், அந்த தொகையை காசோலையாக வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, விமல் மீது கோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், செக் மோசடி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.