நடிகரும், இயக்குனருமான விஜய் ஆண்டனி இயக்கிய நடித்து தயாரித்த படம் பிச்சைக்காரன் 2. இந்த படத்தின் கதை 2016 தங்களுடைய தயாரிப்பில் வெளியான ஆய்வுக்கூடம் படத்திலிருந்து திருத்தப்பட்டதாக ராஜ கணபதி என்பவர் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்கு பிச்சைக்காரன்-2 படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஆய்வுக்கூடம் படத்திற்கும் இதுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. பட வெளியீட்டை தடுக்கவே கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மன கஸ்டத்தில் உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.