நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, ‘சாகுந்தலம்’ படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்விக்கு மத்தியில், பகவத் கீதையின் ஒரு வரியை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், ‘உங்கள் பரிந்துரைக்கப்பட்ட செயலைச் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது, ஆனால் செயலின் பலனைப் பெற உங்களுக்கு உரிமை இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும், ‘சகுந்தலம்’ படம் பேரிடியாக அமைந்தது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.