சென்னை சென்ட்ரல் -கூடூர், சூலூர் பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சூலூர் பேட்டை செல்லும் மெமு ரயில்கள் இன்று அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து சூலூர் பேட்டைக்கு காலை 5.20, காலை 7.45 மணிக்கு செல்லும் விரைவு ரயில் ஆவடிக்கு இரவு 9.15 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சனி மற்றும் செவ்வாய்க்கிழமை முழுவதும் ரத்து செய்யப்படும்.

மறு மார்க்கமாக சூலூர் பேட்டையில் இருந்து பகல் 12.35 மணி மற்றும் மாலை 6.40 மணிக்கு புறப்படும் ரயில்களும் , ஆவடியிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் இந்த தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.