தமிழ் சினிமாவில் முன்னணி காதல் ஜோடிகளாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார். தொடர்ந்து சூர்யாவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். எப்போதும் சூர்யாவிற்கு சப்போர்ட்டாக நடிகை ஜோதிகா இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது காதலித்து வந்த நிலையில் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளவில்லை.

அதன் பிறகு இவர்களின் காதல் இயக்குனர் பாலாவிற்கு தெரிய வந்த நிலையில் சூர்யாவின் அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கி கொடுத்துள்ளார். இருந்தாலும் சூர்யா ஜோதிகாவின் காதலை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தான். அதாவது சூர்யாவும் ஜோதிகாவும் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் திருமணம் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற விஷயம் தெரிந்ததும் அந்த திரைப்படத்தில் வரும் அவளுக்கென்ன அம்பாசமுத்திரம் அல்வா மாதிரி என்ற பாடலை இவர்களுக்காக ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்துள்ளார். மேலும் இந்த பாடல் சூர்யா ஜோதிகாவின் கல்யாண பரிசாக இருக்கட்டும் எனவும் ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார்.