நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் சமக இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். அதில் நிபந்தனையுடன் ஒரு தொகுதி தர அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என கூறியதற்கு சரத்குமாரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஏறக்குறைய கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.