![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/05/186896ef-9304-4161-88af-dee6d36ab760.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பிரபலமான சுற்றுலாத்தளமாக இருக்கிறது. இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் கோடை மலர் கண்காட்சி ஏற்காட்டில் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி ஏற்காட்டில் 47-வது மலர் கண்காட்சி தொடங்கிய நிலையில் இன்றுடன் மலர் கண்காட்சி நிறைவடைவதாக இருந்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. மேலும் மலர் கண்காட்சியை நீடிக்குமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில் வருகின்ற மே 30ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நீடிக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.