கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது ஜெகநாதன் என்ற அவர் போதை காளான் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜெகநாதனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த போதை காளானை பறிமுதல் செய்தனர்.