கோயம்புத்தூர் மாவட்டம் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றுபவர் மதுசூதனன். இவர் நேற்று மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தொண்டமுத்தூர் பகுதியை சேர்ந்த இளநீர் வியாபாரி மர்லின் அவ்வழியாக வந்துள்ளார்.

அவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வந்ததால் மதுசூதனன் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் மர்லினுக்கும் காவலர் மதுசூதனனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் மர்லின் போக்குவரத்து காவலர் மதுசூதனனை தாக்க முயன்றுள்ளார இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதியப்பட்டு மர்லின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.