கடந்த ஐந்து ஆண்டு காலம் சிபிஎம் சு.வெங்கடேசன் சும்மாவே இருந்ததால் மதுரை மக்கள் அவரை சு. வெ என அழைப்பதாக அதிமுக வேட்பாளர் மரு. சரவணன் கிண்டலடித்துள்ளார். மதுரையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருக்கும் சு. வெங்கடேசன் மக்களை நேரில் சந்திப்பதில்லை. விளம்பர பிரியரான அவருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக மக்களுடன் மக்களாக நின்று வாழ்வுரிமைக்காக போராடும் எனக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.