சுப்ரீம் ஸ்டாரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் சினிமாவில் தான் கடந்து வந்த பாதையில் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கின்றார். அதற்கு ஒரே ஒரு காரணம் தான். அவர் சொன்ன நோ என்ற வார்த்தை மட்டுமே. பட வாய்ப்பு வேண்டும் என்றால் நடிகர்கள், தயாரிப்பாளர்களின் படுகைக்குச் செல்ல வேண்டும் என வரலட்சுமி ஓபன் ஆக கூறி இருக்கின்றார். இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் படுக்கையறைக்கு வர வேண்டும் என தெரிவித்ததாக ஓபனாக பேசியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

படுக்கைக்கு வந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட வாய்ப்பு தனக்கு தேவையில்லை என கூறி இருக்கின்றார் வரலட்சுமி சரத்குமார். இவர் அப்படி கூறியதால் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் அவர் குறித்து தவறாகவும் பேசப்பட்டது. அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் தடுக்கவும் பட்டுள்ளது. ஆனால் தற்போது அதை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது தனது திறமையால் வளர்ந்து வருகின்றார் வரலட்சுமி சரத்குமார்.