வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை நகரில் 21 லட்சம் அகல்விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, “சிவஜோதி அர்ப்பணம் 2023” என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளக்குகள் ஏற்றப்படுவதாக கூறியுள்ளார். மேலும் கடந்த ஆண்டு 11.71 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் இந்த வருடம் கின்னஸ் சாதனையாக 21 லட்சம் விலக்குகள் ஏற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநில அரசின் உயர் அதிகாரிகளை கூட்டி இதற்கான ஏற்பாடுகளை நேற்று அவர் ஆய்வு செய்துள்ளார்.

அப்போது உஜ்ஜைன்  நகர கோவில்கள், சிப்ரா நதிக்கரை, வீடுகள், வர்த்தக பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் இந்த விளக்குகளை ஏற்றுமாறு அவர் தெரிவித்துள்ளார். அதன் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உஜ்ஜைனில்  வசிப்பவர்கள் மகா சிவராத்திரி அன்று 21 லட்சம் விளக்குகளை ஏற்றி இறைவனுக்கு தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவார்கள். அரசு மற்றும் மக்களின் பங்களிப்புடன் மட்டுமே இந்த மிகப்பெரிய நிகழ்வு சாத்தியமாகும் என தெரிவித்துள்ளார்.