மண்டேலா திரைப்படத்தின் டைரக்டர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு போன்ற 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் படக்குழு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் மாவீரன் படம் பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த படத்தில் விடுப்பட்ட சில காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டதாகவும் இதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மற்றொருபுறம் படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளில் ஈடுப்பட்டு உ ள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் 2-ஆம் சிங்கிள் விரைவில் வெளியாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மாவீரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.