தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் நடித்ததன் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்திருந்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் நடிகர் விஜய குமாரின் மகள் மற்றும் நடிகர் அருண் விஜய்யின் அக்கா ஆவார்.

இப்போது வனிதா பல தமிழ் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை வனிதா விஜய குமார் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை செலுத்திய அவர் தொடர்ந்து ஏழுமலையானை தரிசனம்  செய்தார். கோயிலுக்கு வெளியில் வந்த அவருடன் ரசிகர்கள் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.