பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய கர்ணன் படத்தை இயக்கி இருந்தார். இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து மாரி செல்வராஜ், தனுஷை வைத்து புது படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படம் வாயிலாக தனுஷுடன் மாரி செல்வராஜ் 2-வது முறையாக இணைந்து உள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் குறித்து மாரி செல்வராஜ் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது “இந்த படம் வரலாற்று படமாக உருவாக இருக்கிறது. படத்தின் கதையை இறுதிப்படுத்திவிட்டோம். இக்கதை எல்லா காலக்கட்டத்தையும் ஒன்றிணைக்க கூடியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.