பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா பகுதியில் சிறை ஒன்று அமைந்துள்ளது இந்த சிறையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென சிறை முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியிலும் சிறையில் உள்ள கைதிகளை வெளியேற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

ஆனால் இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையை சுவாசித்ததால் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கையில் “ஒரு அறையில் உள்ள மெத்தையில் ஏற்பட்ட தீ தான் சிறை முழுவதும் பரவியது” என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.