இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இந்த உலகத்தில் நடைபெறும் பல புது அற்புதங்களை இணையம் மூலமாக நாம் தெரிந்து கொள்கிறோம். பொதுவாகவே செல்ல பிராணிகளில் நாய் என்பது அனைவராலும் மிகவும் விருப்பப்படும் விலங்கு. இவை வீட்டில் உள்ள நபர்களிடம் அதிக அளவு பாசத்தை வைத்திருக்கும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு சிறுமி சாலையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அந்த வழியாக ஒரு கார் வருகின்றது.

அப்போது திடீரென கார் கதவு திறக்கும் நிலையில் கார் பின்னோக்கி வருகின்றது. காரில் உள்ளவர்களை கண்டு சிறுமி பயப்படும் நிலையில் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார். உடனே சிறுமிக்கு ஏதோ விபரீதம் நடைபெறுவதை உணர்ந்த அங்கிருந்த நாய் ஒன்று அந்த காரில் உள்ளவர்களை பார்த்து குறைக்க தொடங்குகின்றது. இதனைப் பார்த்த அந்த காலில் வந்தவர்கள் அஞ்சு ஓடுகின்றனர். நாயின் உதவியால் அந்த சிறுமி காப்பாற்றப்படுகின்றார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.