செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையில் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சூனிய சடங்குகளில் சிறுமைகளை மிரட்டி நிர்வாணமாக பங்கேற்க செய்ததுடன் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களில் கிடைத்த ஆபாச வீடியோக்களை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.