கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக தமிழ்நாடு செய்தி துறை தெரிவித்துள்ளது. அதன்படி சிறந்த சீரியலுக்கு முதல் பரிசாக 2 லட்சம், இரண்டாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் சிறு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தரமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு படத்திற்கும் ஏழு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.