தமிழ் திரை உலகில்  இன்றைய தலைமுறையின் முக்கியமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் செல்வராகவன். இவர் தமிழில் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இவர் ஆவார், சாணி காகிதம், மிருகம் மற்றும் அவரது நானே ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி இயக்கிய பகாசுரன் திரைப்படத்தில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

இந்நிலையில் செல்வராகவன் ட்விட்டரில் மோட்டிவேஷனலாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது முதல் காதல் குறித்து விருப்பமாக எழுதியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ட்விட்டரில் அவர், அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ, நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது. அது வாழ்க்கையில் ஒரு முறை தான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை என பதிவிட்டுள்ளார்.