நடிகை ஜியா ஷங்கர் சமீபத்தில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தான் நோய்வாய்ப்பட்டதாகச் சொன்னார். தனது பெற்றோர் ஏற்கனவே தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும், அதனால் நோய்வாய்ப்பட்ட அந்த சமயத்தில் தனியாக குடும்ப மருத்துவரிடம் சென்றதாகவும் அவர் கூறினார்.

அப்பத்து மருத்துவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இது தனது வாழ்க்கையில் மிகவும் வருத்தமான விஷயம் என்றும் அவர் விவரித்தார். முன்னதாக நடிகைகள் பலர் மி டூ இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.