பிரபல தனியார் தொலைகாட்சி யான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் விஜேவாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஸ்ரீஸ்காந்த் என்பவரை 2014ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவரை சில வருடங்களிலேயே பிரிந்துவிட்டார் டிடி. இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர்,முதல் முறையாக கிளப்புக்கு செல்ல ஆசைப்பட்டு அப்பா அம்மாவிடம் கேட்டேன். அம்மா முடியாது என்கிறார்.

ஆனால் அப்பா நீ போ என்று கூறி கிளாமர் டிரஸ் போட்டுக்க அம்மாவுக்கு தெரியாமல் இருக்க மேலே ஒரு சட்டை போட்டுக்கோ என்றும் கூறினார். 11 மணிக்கு எனக்கு கால் பண்ணா போதும் என்று என்னை கிளப்பில் விட்டார்.  இன்னைக்கும் என்னை சுற்றி 100 பேர் குடிச்சாலும் எனக்கு குடிக்கணும்னு ஒரு ஆசை வந்ததே இல்லை. ஊத்தி கூட கொடுக்கலாம். நான் குடிக்க மாட்டேன். ஆனால் அங்கே போய் சில மணி நேரத்திலேயே அப்பாவுக்கு கால் பண்ணி இங்கு இருக்க பிடிக்கல. அதிலிருந்தே பார்ட்டி என்றாலே வெறுப்பதாக கூறியுள்ளார்.