தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நான்கே நாட்களில் உலக அளவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா என தெலுங்கு மாநிலங்களிலும் இந்த திரைப்படம் அதிக வசூல் ஆகியுள்ளது.

தமிழில் மிக அதிகமாக வசூல் செய்த படம் பொன்னியின் செல்வன் என்ற நிலையில் அந்த படத்தின் சாதனையை இன்னும் ஒரு சில நாட்களில் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.