சென்னையில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளின் டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கப்படும் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கவுண்டரில் டிக்கெட் விற்பதால் ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன் பிளாக்கில் அதனை விற்பனை செய்யும் சட்டவிரோத செயல்களும் அரங்கேறுகின்றன. இதனை தவிர்க்க ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்கப்படும் என கூறிய அணி நிர்வாகம் விரைவில் தேதி அறிவிக்கப்படும் இடமும் தெரிவித்துள்ளது.