தமிழகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலமாக சாலையோர வியாபாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதல் முறை கடன் பெறுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், இரண்டாவது முறை 20 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது முறை கடன் பெறுபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கும் பல்வேறு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் 270 மாநகராட்சி ஊழியர்களுக்கு 9 கோடி ஓய்வூதிய பண பலன் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எனவே இந்த கடன் உதவியை சாலையோர வியாபாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர்கள் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.