கழிவுநீரில் சுற்றித் திரியும் மாடுகள் அந்த தண்ணீரையே குடிக்கின்றன. இந்த மாடுகளில் இருந்து பெறக்கூடிய பாலை குடித்தால் என்னாகும்? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை சென்னை மாநகராட்சி ட்வீட் செய்துள்ளது. கழிவு தண்ணீரில் சுற்றித் திரியும் கால்நடைகளில் (மாடுகளில்) இருந்து பெறக்கூடிய பாலை பயன்படுத்த வேண்டாம்  என்று கூறியுள்ளார்.

மேலும் இதன் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  சென்னையில் மட்டுமல்ல மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கால்நடைகள் பராமரிப்பு சரியாக இல்லை என்பதே உண்மை.