தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றவர்களுக்கான தகுதி பட்டியலில் 1016 பேர் இடம்பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற தகுதியானவர்களின் உத்தேச பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வயது மூப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல் நிலை ஆசிரியர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பதவி உயர்வுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் தற்போது 1016 ஆசிரியர்களிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர்கள் இடங்களுக்கான பதவி உயர்வு இறுதிப் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்காக அதற்கான ஆணைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.