தமிழகத்தில் சாலையோர பேனர்கள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக இது போன்ற விபத்துக்களை தவிர்க்கும் நடவடிக்கையாக சென்னையில் உள்ள சாலைகளில் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் பிளக்ஸ்கள் போன்றவற்றை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி தற்போது தடை விதித்துள்ளது. இதனை மீறி வைக்கப்படும் பேனர்களை அகற்றுவதற்கு மாநகராட்சி மண்டல் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்களை அகற்ற வேண்டும். சாலையோர சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அகற்றிய பொருட்களை பாதுகாத்து வைத்து அவற்றை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதத்தில் இரண்டு மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.