சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு நெஞ்சை உருக்கும் வீடியோவில், வனவிலங்கு காப்பகத்தில் ஒருவர் தனது சஃபாரி ஜீப்பிற்கு வெளியே நின்று கொண்டிருப்பதை காண முடிகிறது. அப்போது திடீரென ஒரு பிரம்மாண்டமான சிங்கம் அவரை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்து வருவது போன்ற காட்சி பார்ப்பவர்களை உறைய வைக்கிறது.

ஆனால், அடுத்த நொடியே யாரும் எதிர்பாராத ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. அந்த சிங்கம் தாக்கும் எண்ணத்துடன் வராமல், நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது நெருங்கிய நண்பரைக் கண்ட மகிழ்ச்சியில், ஒரு வளர்ப்புப் பூனை குட்டியைப் போல அவரை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தியது.

 

View this post on Instagram

 

A post shared by Smart Animalz (@smartanimalz)

“>

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தகவலின்படி, அந்த நபர் சில மாதங்கள் பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் காப்பகத்திற்குத் திரும்பியுள்ளார். காட்டின் ராஜாவாகக் கருதப்படும் சிங்கம், தனது பழைய நண்பனைப் பார்த்தவுடன் காட்டிய இந்த அதீத பாசம் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.

மேலும் “மிருகங்களிடமும் உண்மையான அன்பு உண்டு” என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ, இதுவரை 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான இந்த ஆழமான பிணைப்பு மற்றும் நம்பிக்கையை இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.