19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றது. சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஓட்ட பந்தய வீராங்கனை வித்யா ராம்ராஜ், 1984 ஆம் ஆண்டு இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பிடி உஷாவின் (55.42 வினாடி) சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியன் கிராண்ட் பிரீ 5 தடகளப் போட்டியில் நூலிழையில் அவரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட வித்யா தற்போது அதனை சாத்தியப்படுத்தியுள்ளார். சாதனை படைத்த வித்யாவிற்கு பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.