மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 2 1/2 வயது குழந்தை தனது பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன் குழந்தைக்கு சிப்ஸ் மற்றும் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தையை ரூம் ஒன்றிற்கு அழைத்து சென்று அந்த சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டான்.

மாலை வரை குழந்தை வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனுக்கு தொலைபேசியில் அழைத்து பார்த்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனை ஒன்றிலிருந்து பெற்றோருக்கு போன் கால் வந்துள்ளது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

சிறுவன் அழைத்துச் சென்ற அறையில் மயங்கிய நிலையில் கிடந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தையின் தாய் அழித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.