தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அங்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா ஷர்மா, தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைந்தால் ஹைதராபாத் நகரத்தின் பெயரை 30 நிமிடங்களில் பாக்யாநகர் என்று மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.