2008ல் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி 41,57,225 மதிப்பில் இந்தோனேஷியாவில் உள்ள நிறுவன பங்குகளை வாங்கியுள்ளார். அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். இந்த பணப் பரிவர்த்தனைகளை RBI விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், FEMA சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த ரெய்டு நடக்கிறது