மணிப்பூரில் உடனடியாக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற வன்கொடுமைகள் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், “உடனடியாக பிரிவு 356ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.