மும்பை – நாக்பூரை இணைக்கும் அதிவிரைவு சாலைப் பணியின்போது கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட VSL எனும் கட்டுமான நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்த சந்தோஷ், கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இருவரின் உடல்களும் இன்று தமிழகம் கொண்டுவரப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.