ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோது விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி சென்ற பேருந்து மீது புல்லாம்பேட்டா என்ற இடத்தில் லாரி மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர் ராஜம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.