இந்திய ரயில்வே அமைச்சகம் அதிக போக்குவரத்தை அதிகரிப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டோமொபைல் போக்குவரத்திற்கான சரக்கு கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு சரக்கு வாகனங்களுக்கான கட்டணத்தை திருத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் ஆட்டோமொபைல் யூனிட் களை கொண்டு செல்லும் தூரத்தை பொறுத்து கட்டணத்தை உயர்த்தியது.

இதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆட்டோ மொபைல் போக்குவரத்துக்கான சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் 150 முதல் 600 கிலோ மீட்டர் வரையிலான ஆட்டோ மொபைல் போக்குவரதுக்கு 11 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டண முறை 2024 ஆம் ஆண்டு மே மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.