திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக சாமியை தரிசிக்க வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி முதல் இலவச டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதேசி வருகின்ற 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அல்லது டிசம்பர் 22ஆம் தேதி முதல் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு செய்த இலவச டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.