தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. கடைசியாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்தடுத்து இறைவன், ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் ஒரு படம், Siren ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 பாகம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவரின்ம் மார்கெட் உயர்ந்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 பாகத்தில் ரூ. 25 கோடிவரை சம்பளம் வாங்கியுள்ள அவர் இனிவரும் படங்களிலும் சம்பளத்தை மேலும் உயர்த்தலாம் என சினிமா வட்டாரங்களில் தகவல் கூறப்படுகிறது.