சபரிமலை கோவிலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜைக்காக நேற்று கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் மண்டல பூஜைக்கு பிறகு டிசம்பர் 27ஆம் தேதி நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.