திருப்பதியில் இருந்து காட்பாடி செல்லும் விரைவு ரயில் சேவை நவம்பர் 20 முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பித்ரகுண்டாவில் இருந்து அதிகாலை மணிக்கு சென்ட்ரல் வரும் விரைவு ரயில், சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ரகுண்டா செல்லும் ரயில் நவம்பர் 20 முதல் நவம்பர் 24 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதியில் இருந்து காலை 6.50 மணிக்கு காட்பாடி செல்லும் சிறப்பு ரயில், காட்பாடியில் இருந்து 9.15 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில், காட்பாடியில் இருந்து காலை 9.30 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் விரைவு ரயில், ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு காட்பாடி செல்லும் ரயில், அரக்கோணத்தில் இருந்து காலை 7 புள்ளி 10 மணிக்கு கடப்பா செல்லும் ரயில், கடப்பாவில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் ஆகியவை நவம்பர் 20 முதல் நவம்பர் 26ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.