சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகர விளக்கு பூஜை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் நிலையில் இதனை முன்னிட்டு பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை உடனடி தரிசனம் முன்பதிவு ரத்து செய்யப்படுகின்றது. ஜனவரி 14-ஆம் தேதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஐம்பதாயிரம் ஆகவும், 15ஆம் தேதி 40 ஆயிரமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.