அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் அவர்கள், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்  இன்று இது குறித்து பேசிய  பிரதமர் நரேந்திர மோடி, “சனாதன தர்மத்தை ஒழிப்பதே INDIA கூட்டணியின் நோக்கம்.

எதிர்கட்சிகளின் கூட்டணியில் உள்ளவர்கள் தலைக்கனம் கொண்டவர்கள். சனாதனம் மீதான தாக்குதல் இந்திய கலாசாரம் மீதான தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், யார் எவ்வளவு தாக்கினாலும் சனாதனம் உயர்ந்துகொண்டே இருக்கும் என தெரிவித்துள்ளார்.