நாடு முழுவதுமே அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஆர்பிஐ கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்கி வருகின்றன. அவ்வப்போது RBI வங்கி வங்கிகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்தவகையில் வாடிக்கையாளர்கள் தங்களது ஒரிஜினல் பத்திரத்தை வங்கியில் இருந்தோ அல்லது கடன் வாங்கிய கிளையில் இருந்தோ பெற்றுக் கொள்வதற்கான விருப்பத் தேர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

எந்த தேதியில், எந்த இடத்தில் ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விவரத்தை, கடன் வழங்குவதற்கான உத்தரவாத கடிதத்திலேயே வங்கிகள் குறிப்பிட வேண்டும் எனவும் அறிவிறுத்தியுள்ளது.